நாவடைத்து நிற்கின்றேன் நற்றமிழ் வேந்தராம்
பாவலரின் பட்டம் பரிசேற்று - ஆவலுடன்
பூவெடுத்து ஆன்மாவால் கோர்க்கின்றேன்! பண்புடைய
பாவேந்தா் பாதம் பணிந்து !
பணிந்துநான் ஏற்கின்றேன் பாவலரின் பட்டம்!
அணிந்துநான் ஆடுகின்றேன் ஐயா - துணிந்துநான்
இவ்வுலகில் தூயதமிழ் கற்க! துணைநிற்பாய்
எவ்விடத்தும் என்னுள் இருந்து !